விவேகானந்தரின் விவேகமான தத்துவ வரிகள் - பாகம் 3

"நீ நினைப்பதை உன்னால் அடைய முடியும், அடியமுடியாத ஒன்றும் இவ்வுலகில் இல்லை"

"மற்றவன் ஒருவனால் செய்ய முடியும் காரியத்தை உன்னால் செய்ய இயலாது என நினைக்காதே"

"என்னால் எல்லாவற்றையும் சாதித்து சரித்திரம் படைக்க முடியும்" என்று சொல். 

உன்னால் உறுதியாக இருக்க முடிந்தால் பாம்பின் விஷம்கூட விஷமற்றதாக மாறிவிடும்."

"இவ்வுலகத்தில் வாழ்வதற்கு பலம் வேண்டும்; சாவதற்கு பலவீனம் போதுமானது!"

"கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி."

"அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு."

"மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்."

"சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன."

"அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்."

"உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்."

"உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன."

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.