பொதுவான தமிழ் தத்துவங்கள் - 01

மிகவும் வேதனையான விஷயம்..
உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது....
மிகவும் சந்தோஷமான விஷயம்
உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது...

ஆசைகளை அடியோடு ஒழிப்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு தேவையும் இல்லை. பதிலாக, நம் உள்ளத்தில் எழும் ஆசைகளைச் சீரமைத்து வளமான வாழ்க்கை வாழ்வதே அறிவுடைமை.

குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்.
குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான்...
யாருக்கு அதை வழங்குவது என்பதை ....பணம் முடிவு செய்கிறது..!!!
-கவிச்சக்ரவர்த்தி கண்ணதாசன்..

நம்முடைய உண்மை நிலையை மறைப்பது,
நம்மை நாமே ஏமாற்றி கொள்வதாக முடியும்.....

தன் வேலையில் முனைப்பு இல்லாதவனுக்கு தான் பிறர் வேலை பற்றிய லாப நஷ்டக் கணக்கு வரும். தனக்குள் தான் நிலையாகாதவன் தான்
பிறர் செய்கை சரி, தவறு என்று விவாதம் செய்வான்.

எவ்வளவு தான் நன்றாக பழகினாலும் ஒரு சிலரின் உண்மை குணம் சில சந்தர்ப்பங்களில் தான் நமக்கு தெரிகிறது.....
இவ்வளவு நாட்கள் அவர்களின் உண்மை குணத்தை மறைத்து வைத்திருந்தது அவர்களின் திறமையா...? அல்லது அறியாமல் இருந்தது நமது அறியாமையா....???

"இது என்னுடையது" என்று நினைக்கும் வரை, எதையும் விட்டுக் கொடுக்க நாம் தயாரில்லை.
"எதுவும் என்னுடையது அல்ல" என்கிற பக்குவம் வரும்போது, விட்டுக் கொடுக்க நம்மிடம் ஏதும் இருப்பதில்லை..

தேவையில்லாததையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால்....தேவையானதையெல்லாம் விற்க வேண்டி வரும்.......

உதிர்ந்த மலருக்கு ஒரு நாளில் மரணம்.
பேசாத உறவுக்கு தினம் தினம் மரணம்..
உரியவர்களிடம் உரிமையோடு பேசுங்கள்.
உறவுகளை அன்புடன் நேசியுங்கள்.. அன்பை மட்டுமே சுவாசியுங்கள்...

அறிவுடையார் நிகழக்கூடியதையும் அறிவர்.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுதல் அறிவுடைமை.
அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாதிருத்தல் அறிவின்மை.

வெற்றி - உனக்கு கொண்டாட மகிழ்ச்சியை தரும். தோல்வி - போராட உனக்கு போதுமான வெறியை தரும்.
வெற்றி - உன்னை யாரென்று இந்த உலகத்திற்கு காட்டும்.
தோல்வி - நீ யாரென்று உனக்கே காட்டும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.