- அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
- அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
- அகல இருந்தால் பகையும் உறவாம்.
- அகல உழுகிறதை விட ஆழ உழு.
- அகல் வட்டம் பகல் மழை.
- அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
- அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
- அக்காடு வெட்டி பஞ்சு விளைந்தால் என்றால் எனக்கொரு வேட்டி, உனக்கொரு வேட்டி என்றார்களாம்.
- அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு.
- அகவிலை அறியாதவன் துக்கம் அறியான்.
- அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு.
- அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
- அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
- அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
- அடக்கமே பெண்ணுக்கு அழகு.
- அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
- அடாது செய்தவன் படாது படுவான்.
- அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார்
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
- அடியாத மாடு படியாது.
- அடிக்கிற கைதான் அணைக்கும்!
- அடி மேல் அடி விழுந்தால் (வைத்தால்) அம்மியும் நகரும்.
- அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம்.
- அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும்.
- அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.
- அகத்துக்காரன் அடித்தானோ, கண் புளிச்சை போச்சோ !
- அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.
- அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
- இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு
- அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்
- அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.
- அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம்.
- அதிகாரம் படைத்தவன் தம்பி சண்டபிரசண்டனாம்.
- அதிருஷ்ட்டம் வந்தால் கூரையை கிழித்துக்கொண்டு கொட்டுமாம்!..
- அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
- அந்தி மழை அழுதாலும் விடாது.
- அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
- அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
- அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்.
- அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
- அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.
- அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்.
- அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல.
- அரும இல்லாத வூட்ல எருமயும் குடியிருக்காது.
- இது 'அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல' என்பதன் திரிந்த வழக்கு
- அரசினை நம்பி புருசனைக் கைவிட்டது போல
- குழந்தை வேண்டும் பெண்கள் அரச மரத்தினைச் சுற்றிவந்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நம்பிக்கையுடைய பெண் கணவனோடு கூடி இல்லறம் நடத்தாவிட்டால் குழந்தை பிறக்காது என்பதே கருத்து.
- அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்.
- அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிற்றை தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்.
- அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
- அரித்தால் அவந்தான் சொரிந்துகொள்ளவேண்டும்.
- அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது.
- அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்
- அரைக்காசுக்கு அழிந்த மானம் ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது. (அரைக்காசுக்கு போன மானம் ஆயிரம் கொடுத்தாலும் வராது)
- அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
- அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
- அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
- அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
- அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
- அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
- அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.
- அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே
- அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
- அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
- அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
- அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
- அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
- அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
- அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
- அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
- அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
- அழக் கொண்ட எல்லாம் அழப் போகும்.
- அழகுக்கு அணிந்த ஆபரணம் ஆபத்துக்கு உதவும்.
- அழச் சொல்லுவார் தமர், சிரிக்கச் சொல்லுவார் பிறர்.
- அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
- அழிவழக்குச் சொன்னவன் பழி பொறுக்கும் மன்னவன்.
- அழுத பிள்ளை பால் குடிக்கும்.
- அழுதாலும் பிள்ளை அவளே பெற வேண்டும்.
- அளகாபுரிக் கொள்ளையானாலும் அதிருட்டம் கெட்டவனுக்கு ஒன்றுமில்லை.
- அளகேசனாகவே இருந்தாலும் அளவு அறிந்து செலவு செய்ய வேண்டும்.
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?
- அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
- அள்ளாதது குறையாது , சொல்லாதது பிறவாது.
- அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
- அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரி
- அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
- அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
- அறச் செட்டு முழு நட்டம்.
- அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்.
- அறமுறுக்கினால் அற்றுப் போகும்.
- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
- அறிய அறியக் கெடுவார் உண்டா?
- அறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
- அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.
- அறிவீனனிடம் புத்தி கேட்காதே.
- அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
- அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
- அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
- அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.
- அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
- அறுக்கமாட்டாதவன் இடுப்பில் ஆயிரத்துஎட்டு அறிவாளாம்!
- அறையில் ஆடியல்லவா அம்பலத்தில் ஆட வேண்டும்?
- அற்ப அறிவு அல்லலுக்கு இடம்.
- அற்ப ஆசை கோடி தவத்தைக் கெடுக்கும்.
- அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
- அற்றது பற்றெனில் உற்றது வீடு.
- அன்பான நண்பனை ஆபத்தில் அறி.
- அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாள்?
- அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்.
- அன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
- அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேண்டுமாம்.
- அன்னப் பாலுக்குச் சிங்கி அடித்தவன் ஆவின் பாலுக்குச் சர்க்கரை தேடுகிறான்.
- அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்.
- அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
- அன்னையைப் போலொரு தெய்வமும் உண்டோ அவர் அடி தொழமறுப்போர் மனிதரில்லை
- அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
- அல்லற்ற வீட்டில் பல்லியும் சேராது.
ஆ பழமொழிகள்
- ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
- ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
- ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
- ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
- ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
- ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
- ஆசை வெட்கம் அறியாது.
- ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.(A bad workman blames his tools)
- ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
- ஆடிப் பட்டம் தேடி விதை.
- ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
- ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
- ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
- ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
- ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
- ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
- ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
- ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு, ஊரெல்லாம் தேடினானாம்.
- ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
- ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மூலம்
- இது 'ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்' என்பதன் திரிந்த வழக்கு.
- ஆண்மூலம் அரசாளும், பெண்மூலம் நிர்மலம்
- ஆண்மூலம் அரசாளும், பெண் மூலம் (வழியாக) தெளிவு, நிம்மதி என்பது பொருள்.
- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
- ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
- ஆயிரங்கலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
- ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
- ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
- இது 'ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்' என்பதன் திரிந்த வழக்கு.
- ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர்
- மூலிகைக்காக ஆயிரம் வேரைக் கொன்றவர் அரை வைத்தியர் என்பது பொருள்.
- ஆயக்காரன் ஐந்து பணங் கேட்பான்; அதாவெட்டுக்காரன் ஐம்பது பணங் கேட்பான்
- ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே.
- ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
- ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
- ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை
- ஆயிரம் பொய் சொன்னாலும் ஒரு கல்யாணம் செய்து வை.
- ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
- ஆரால் கேடு, வாயால் கேடு.
- ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
- ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
- ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
- ஆழமறியாமல் காலை இடாதே.
- ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
- ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
- ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
- ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
- ஆள் பாதி, ஆடை பாதி.
- ஆழம் தெரியாமல் காலை விடாதே.
- ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
- ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
- ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
- ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
- ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
- ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
- ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
- ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
- ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
- ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
- ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
- ஆனைக்கும் அடி சறுக்கும்.
- ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
- ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
- ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
- ஆனைப் பசிக்கு சோளப் பொரி
- ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
- ஆனைய புடின்னா பூனைய புடிச்சானாம்.
- ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
- ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
- ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
- ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
- ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.
- இக்கரைக்கு அக்கரை பச்சை.
- இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
- இஞ்சி இலாபம் மஞ்சளில்.
- இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
- இஞ்சி தின்ன குரங்கு மாதிரி....
- இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
- இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.
- இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை.
- இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
- இமைக்குற்றம் கண்ணுக்குத் தெரியாது.
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- இரண்டு வீட்டிலும் கலியாணம், இடையிலே செத்ததாம் நாய்க்குட்டி.
- இரண்டு ஓடத்தில் கால் வைக்காதே.
- இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந்தையை எறியாதே.
- இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
- இராச திசையில் கெட்டவணுமில்லை
- இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.
- இருக்குறவ அள்ளி முடியறா.
- இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.
- இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.
- இருவர் நட்பு ஒருவர் பொறை.
- இலவு காத்த கிளி போல....
- இல்லாது பிறாவது அள்ளாது குறையாது.
- இல்லது வாராது; உள்ளது போகாது.
- இல்லாததை கொண்டா, கல்லாததைப் பாடு (என்பர்கள், எங்கிறார்கள்)
- இல்லாதவனுக்கு பசியேப்பம், இருப்பவனுக்கோ புளியேப்பம்.
- இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?
- இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
- இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.
- இளங்கன்று பயமறியாது
- இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து.
- இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்.
- இளைய பிள்ளைக்காரிக்குத் தலைப் பிள்ளைக்காரி வைத்தியம் சொன்னது போல.
- இறங்கு பொழுதில் மருந்து குடி.
- இறுகினால் களி , இளகினால் கூழ்.
- இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- இறைத்த கிணறு ஊறும், இறையாத கிணறு (கேணி) நாறும்.
- இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
- இனம் இனத்தோடே எழைப்பங்கன் பணத்தோடே.
- இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுக்கமாட்டானா?
ஈ பழமொழிகள்
- ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
- ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
- ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
- ஈர நாவிற்கு எலும்பில்லை.
- ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
- ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.
உ பழமொழிகள்
- உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
- உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
- உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
- உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
- உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
- உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
- உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
- உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
- உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
- உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
- உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
- உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
- உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
- உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
- உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
- உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
- உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
- .உப்பில்லா பண்டம் குப்பையிலே
- உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
- உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
- உரம் ஏற்றி உழவு செய்
- உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
- உலோபிக்கு இரட்டை செலவு.
- உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
- உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
- உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
- உளவு இல்லாமல் களவு இல்லை.
- உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
- உள்ளது போகாது இல்லது வாராது.
- உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
- உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
- உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
- உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம்.
- உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
- உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.
- ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
- ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
- ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
- ஊண் அற்றபோது உடலற்றது.
- ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
- ஊமை சொப்பனம் கண்டாற் போல..
- ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
- ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
- ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
- ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
- ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
- ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
- ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
- ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
- ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
- ஊசி முனையில் மூன்று குளம்.
எ பழமொழிகள்
- எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
- எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
- எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
- எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
- எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
- எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
- எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
- எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
- எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
- எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
- எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
- எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
- எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
- எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
- எதார்த்தவாதி வெகுசன விரோதி.
- எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
- எதிரிக்கு எதிரி நண்பன்.
- எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
- எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
- எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
- எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
- எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
- எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
- எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
- எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி?
- எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
- எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல.
- எலி அழுதால் பூனை விடுமா?
- எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
- எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
- எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
- எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
- எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
- எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
- எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
- எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
- எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
- எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
- எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
- எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
- எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
- எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
- எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
- எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
- எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
- எறும்புந் தன் கையால் எண் சாண்
- எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்?
ஏ பழமொழிகள்
- ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை.
- ஏரி நிறைந்தால் கரை கசியும்.
- ஏரி மேல் கோபித்துக்கொண்டு குண்டி கழுவாமல் போனானாம்.
- ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
- ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
- ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
- ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
- ஏழை என்றால் எவர்க்கும் எளிது.
- ஏழைக்கேத்த எள்ளுருண்ட.
- ஏழையின் சொல் அம்பலம் ஏறாது.
- ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்.
- ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
- ஏமாந்தவன் தொடையில் திரித்தது லாபம்.
- ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.
- ஏரி மடை என்றால் நோனி மடை (என்கிறார்)
- ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
- ஐந்தில் விளையாதது, ஐம்பதில் விளையுமா?
- ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
- ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
- ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
- ஐப்பசி அடை மழை.
- ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.
- ஐம்பதிலும் ஆசை வரும்
ஒ பழமொழிகள்
- ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
- ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
- ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
- ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
- ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?
- ஒரு கை (அல்லது வெறுங்கை) முழம் போடுமா?
- ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை
- ஒரு நாள் கூத்துக்கு மீசையைச் சிரைக்கவா?
- ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது சொல்லுதல்
- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய் சொல்லுதல்.
- ஒரு முறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி, மும்முறை உண்பவன் ரோகி.
- ஒருமைப் பாடில்லாத குடி ஒருமிக்கக் கெடும்.
- ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்.
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
- ஒற்றுமையே பலம்.
- ஒருவனாய் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.
- ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.
- ஒளிக்கப் போயும் தலையாரி வீட்டிலா!
- ஒன்னே ஒன்னு, கண்ணே கண்ணு (என்று).......
- ஒண்டவந்த பிடாரி ஊர்ப் பிடாரியை ஓட்டியதாம்.
- ஓசை பெறும் வெண்கலம் ஓசை பெறா மட்கலம்.
- ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம் அதனுள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்.
ஓ பழமொழிகள்

- ஓடி ஒரு கோடி தேடுவதிலும், இருந்து ஒரு காசு தேடுவது நலம்
- ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் இராசா, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.
- ஓடுகிறவனைக் கண்டால் துரத்துகிறவனுக்கு இலேசு.
- ஓடுகிற ஓணானை இடுப்பில் கட்டிக்கொண்டு, குத்துதே குடையுதே என்றானாம்....
- ஓட்டம் உள்ளவரை ஆட்டமும் அதிகம்!
- ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
- ஓட்டை பானையிலும் சர்க்கரை இருக்கும்
- ஓணான் வேலிக்கு இழுக்கிறது; தவளை தண்ணீருக்கு இழுக்கிறது!
- ஓதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்.
- ஓதுவார் எல்லாம் உழுவான் தலைக்கடையிலே.
- ஓர் ஊருக்கு ஒரு வழியா? ஒன்பது வழி.
- ஓர் ஊர்ப்பேச்சு ஓர் ஊருக்கு ஏச்சு.
ஒள பழமொழிகள்

- ஒளவை சொல்லுக்கு அச்சம் இல்லை.