அம்பெத்கர் தத்துவங்கள் உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்! இவை அம்பேத்கர் தத்துவங்கள் எனவும் அம்பேத்கர் பொன்மொழிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுமின்.
வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான்.
எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; மூன்றாவது தெய்வம் நன்னடத்தை. இவற்றைத் தவிர வேறு தெய்வங்கள் எனக்கு இல்லை.

உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
முக்கியமான மூன்று விஷயங்களில் நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவை பொது ஒழுக்கம், முன்னேற்றத்தில் சிரத்தை, சிந்தனையில் மகத்தான புரட்சி என்பனவாகும்.
இவை கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. அம்பேத்கர் சொன்ன வரிகளே இங்கே அம்பேத்கர் பொன்மொழிகள் என வெளியிடப்பட்டது.
இவை கற்பனையில் எழுதப்பட்டவை அல்ல. அம்பேத்கர் சொன்ன வரிகளே இங்கே அம்பேத்கர் பொன்மொழிகள் என வெளியிடப்பட்டது.
---------------------------------------------------------------------------------------
அம்பெத்கர் தத்துவங்கள், அம்பெத்கர் பொன்மொழிகள், அம்பெத்கர் தத்துவ கருத்துக்கள், அம்பெத்கர் சிந்தனை வரிகள்
---------------------------------------------------------------------------------------