பொதுவான தமிழ் தத்துவங்கள் - 04

சிலரது அக்கறை..... சிலருக்கு அரியண்டம்!
சிலரது காதல்..... சிலருக்கு காமடி
சிலரது அழுகை..... சிலருக்கு சிரிப்பு!
சிலரது துக்கம்..... சிலருக்கு சந்தோஷம்!
சிலரது ஆதங்கம்..... சிலருக்கு ஆனந்தம்!
என்ன செய்ய? சிலவேளைகளில் “உண்மை ஊமையாகும் போது கண்ணீர் மொழியாகின்றது”......

ஒவ்வொருவருக்கும் மற்றவரின் குறைகள் "பளிச்"சென்று தெரிகிறது.
ஆனால்... அவரவரின் குறைகள்
மங்கலாகக் கூடத்தெரிவதில்லை....

மேலோட்டமாக பார்த்தாலே அடுத்தவர்களுடைய  குறைகளைக் கண்டுபிடித்து விடுவோம். ஆனால்...
நம் குறைகளைப் பார்க்க, தெளிந்த பார்வை இருந்தால் மட்டுமே முடியும்..


நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம்...
ஆனால்....
நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை...

பல துன்பங்களையும், சின்னச் சின்ன அவமானங்களையும் சந்தித்தால் தான் வாழ்க்கையில் உயரமுடியும்...

எதையும், எல்லாவற்றையும் உங்களால் செய்ய இயலும்... அதற்குண்டான அனைத்து சக்தியும் உங்களிடம் உள்ளது
என்பதை நீங்கள் முழுமையாக நம்புங்கள்......

சாதிக்க நினைப்பவன் மட்டுமே அதிகமாக சோதிக்கபடுகிறான். பிறரை அதிகமாக நேசிப்பவன் மட்டுமே அதிகமாக காயப்படுகிறான்.

பிறப்பது ஒரு முறை, வாழ்வதும் ஒரு முறை,  பிறகு எதற்கு "கோபம்" என்னும் "வன்முறை".

நம்பிக்கை என்பது ஜாடி போன்றது. உடைந்த பின் ஒட்டி வைக்கலாம். ஆனால் முன்பு போல் இருக்காது...

உன் மீது பிரியம் உள்ளவர்கள் நீ பொய்யை சொன்னாலும் நம்பிவிடுவார்கள்..
உன் மீது பிரியம் இல்லாதவர்கள் நீ உண்மையை சொன்னாலும் நம்பமாட்டார்கள்..

அலைகள் ஓய்ந்த பிறகு தான், கடலில் குளிப்பதென்பது முடியாது.
நீந்தத் தெரிந்த பிறகே,
நீரில் இறங்குவது என்பதும் இயலாது.
வாழ்க்கையும் அப்படித்தான்......

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.