நட்பு பற்றி தத்துவஞானிகள் சொன்ன வரிகள்

இரண்டு பேரில் ஒருவருடைய சிறு தவறுகளை மற்றவர் மன்னிக்க முடியாவிட்டால், அவர்களுடைய நட்பு நீடித்திருக்க முடியாது

- புளுவர்.


ஒரு நல்ல நூலைப் போலச் சிறந்த நண்பனும், நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை

- அறிஞர் அண்ணா


பரிசுகள் கொடுத்து நண்பர்களைச் சேர்க்காதே, நீ கொடுப்பது நின்றால் அவர்கள் அன்பு செலுத்தாமல் நின்று விடுவர்.

-புல்லர்


உன்னை விட உயர்வான ஒரு மனிதரைத் தவிர மற்றவருடன் ஒரு போதும் நட்பு கொள்ள வேண்டாம்.

- கன்பூசியஸ்


நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும். ஆனால் நட்பு கொண்ட பின் அதில் உறுதியாகவும், நிலையாகவும் நிற்கவும்.

-சாக்ரடீஸ்


ஒரு நண்பனைப் பெறுவதற்கு நீ ஒரு நல்ல நண்பானாய் இருப்பது ஒன்றே வழியாகும்

-எமர்சன்


உண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது. அதை இழந்துவிடும் வரை நாம் அதன் உண்மையான மதிப்பை உணர்வதே இல்லை.

-வோல்டன்


உலகின் அதிபதியாக இருந்தாலும், ஒரு நண்பன் அவசியமே

-யங்


முன் கவனமுள்ள ஒரு நண்பனைப் போல் வாழ்க்கையில் வேறு பாக்கியம் இல்லை.
-யூரிபிடிஸ்


நம்மைப் பாராட்டி மதிப்பதை விட நம்மிடம் அதிகமாக அன்பு செலுத்தி நமது பெரிய வேலையில் பங்கு கொள்பவனே நண்பன்

- சான்னிங்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.