![]() |
நான்தான் திருவள்ளுவர் |
திருக்குறள் இயற்றியவர்:- திருவள்ளுவர்
திருவள்ளுவர் வாழ்ந்தகாலம் : கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக கருதப்படுவார்.
திருக்குறளின் வயது :- ஏறக்குறைய 2000 ஆண்டுகள்
திருக்குறள் பற்றிய சில முக்கிய அதிசயங்கள், சிந்தனைகள் சில
திருவள்ளுவரின் மறு பெயர்கள்
- வள்ளுவன்
- செந்நாப் போதார்
- தெய்வப் புலவர்
- நாயனார்
- முப்பால்
- பொதுமறை
- தமிழ்மறை
- உலகப் பொதுமறை
- உத்தரவேதம்
- தெய்வநூல்
- பொய்யாமொழி
- வாயுறை வாழ்த்து
- திருவள்ளுவம்
- திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
- திருவள்ளுவர் இரட்டைப் பாலம்
- வள்ளுவர் கோட்டம்.
திருக்குறள் விளக்கம்
திருக்குறள் கலை (திருக்குறளின் மறுவடிவம்)'இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதைமனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்'
- குறள் பீடம் விருது
- திருவள்ளுவர் சிலை
- திருவள்ளுவர் விருது
- திருவள்ளுவர் (திரைப்படம்)
- திருவள்ளுவர் (இதழ்)
- திருக்குறள் கலைக்காட்சி
- திருக்குறள் நெறிபரப்பு நிறுவனம்
திருக்குறள் பற்றிய பொது விடையங்கள்
- திருக்குறளில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
- திருக்குறளில் 'தமிழ்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
- திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
- திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
- திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
- திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
- திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
- திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
- திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
- திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
- ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளால், ஏழு சீர் களை கொண்டது.
- திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
- திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறலில் இடம்பெற்றதும் இடம்பெறாததும்
- திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
- திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
- திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
- திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
- திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
- திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
- திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
- திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
- திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
- திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
- திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு.போப் (Rev. Dr. G. U. Pope)
- திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
- திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது (9)
- திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
- எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
- ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறல் தமிழ் தவிர்ந்த வேறு மொழிகளில்
- திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
- திருக்குறளை ஆங்கிலத்தில் மட்டும் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
- திருக்குறள் ஆனது நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.