வீட்டை சுத்தம் செய்ய உருளைக்கிழங்கு, தக்காளி போதுமே!

வீட்டை இயற்கையான பொருட்களை கொண்டு மிக எளிதாக சுத்தம் பண்ணலாம்.

இவ்வாறு செய்தால் அனைத்து பொருட்களும் பளிச்சென்று இருப்பதுடன், நறுமணமத்துடனும் இருக்கும்.

* துருப்பிடித்த இரும்பு பொருட்களில், உருளைக்கிழங்கை கொண்டு தேய்தாலே விரைவில் போய்விடும்.

* வாணலியில் உள்ள கருமையை போக்க காபி தூளை கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

* ஜன்னலில் உள்ள எண்ணெய் பசை போன்ற தூசிகள் மற்றும் கறைகள் போவதற்கு வெங்காயத்தை கொண்டு தேய்க்க வேண்டும்.

* பாத்திரம் கழுவும் தொட்டியில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, பளிச்சென்று இருக்க எலுமிச்சையைக் கொண்டு தேய்க்க வேண்டும்.

* சில்வர் பொருட்களை வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதனைக் கொண்டு பாத்திரத்தை தேய்த்து கழுவினால் பாத்திரங்கள் மின்னும்.

* காப்பர் பொருட்கள் புதிது போன்று காணப்பட வேண்டுமானால், தக்காளியைக் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும்.

* வீட்டில் பூச்சிகள் வரும் இடத்தில் பிரியாணி இலையை வைத்தால் பூச்சிகள் வராது.

* பிரிட்ஜில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தைப் போக்க, க்ரீன் டீயின் இலைகளை ஒரு பௌலில் போட்டு, அதனை ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் போய்விடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.