தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்!

உலகின் மிகப்பெரும் தத்துவஞானிகளில் ஒருவரான தத்துவஞானி கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் இங்கே கார்ல்மார்க்ஸ் தத்துவங்கள் என வெளியிடப்படுகிறது.

1. நேரம் மனித வளர்ச்சி இடம்பெறுவதற்கான வெளி.

2. ஒருவன் தனக்காக, தன் வாழ்விற்காக உழைக்கும்போது மனிதன் ஆகிறான். ஒரு சமூகத்திற்காக, மக்களுக்காக வாழும் போதுதான் அவன் உண்மையான தலைவன் ஆகிறான்.

3. ஒருவன் தனது சகமனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும் பாடுபடுவதன்தன் ஊடகவே அவன் தன்னை உயர்த்தி கொள்கிறான்.

4. வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு செக்கனும் எமது வாழ்வில் நாம் மீளபெற முடியாத பெரும் செல்வமாகும்.

5. எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலமானது உழைப்புதான்.

6. ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால், அவன் புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ, ஞானியாகவோ, கவிஞனாகவோ ஆக கூடும், ஆனால் அவனால் என்றுமே உண்மையிலேயே பூரணமான மகத்தான மனிதனாக முடியாது.

7. தொழிலாளர்களின் திறமையான உழைப்பில் தான் தொழில் நிறுவனங்களது வளர்ச்சி இருக்கிறது.

8. பொதுமக்களின் நன்மைக்காக பாடுபடுவதன் ஊடக தம்மை சிறப்பித்து கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது.

9. உங்களிடம் அறிவு எனும் ஒளி இருந்தால் அதிலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றி கொள்ளட்டும்.

10. தாயின் கோபம் பூமேல் பனி உள்ளதை போன்றது.

11. அன்பு நிறைந்த பெண் மீது காதல் செய்வது ஒரு மனிதனை மீளவும் மனிதன் ஆக்குகிறது.

12. ஆழ்ந்து சிந்தித்தபின் முடிவு எடுப்பவனே வெற்றிகளை நோக்கி நகரும் மனிதனாக விளங்கமுடியும்

13. மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது.

14. ஒரு மனிதன் இவ் உலகில் பிறந்தால் பயனின்றி அழிய கூடாது என்பதனை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்.

15. உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

16. ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.

17. நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.

18. தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.

19. சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.

20. நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.

21. இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவை போல் மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறதே.

----------------------------------------------

கார்ல் மார்க்ஸ் தத்துவங்கள்

=====================================================================

தேடல்பொறி / கார்ல்மார்க்ஸ் சிந்தனைகள் / பொன்மொழிகள் / தத்துவ வரிகள் / தத்துவகருத்துக்கள்

=====================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.