ஹிட்லரின் தத்துவங்கள்!


ஹிட்லர் சொன்ன சில உற்சாகமூட்டும் வரிகளே ஹிட்லரின் தத்துவங்கள் எனும் தலைப்பிலே வெளியிடப்படுகிறது.

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர்,நீ இறக்கும் போது உன்னுடன் தான் இருக்கும், அதை உனது சாவிற்காக கொடுக்காமல் சரித்திரத்திற்க்கு கொடு.

எழுதும் சொற்களைவிட பேசும் சொற்கள் வலிமை வாய்ந்தவை.

இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டும் என்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.

என்னை தோற்கடித்தது யாரென கோபத்துடன் திரும்பி பார்த்தேன். வேறு யாரும் இல்லை கோபம்தான் என்னை தோற்கடித்தது.

நீ நடந்து போவதற்கு பாதை இல்லை என கவலை படாதே. நீ நடந்து சென்றால் அதுவே ஒரு பாதைதான்.


புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறவாதே. அது இன்னொரு தடவை உன்னை அவமான படாமல் காப்பாற்றும்.


எதிர் பார்க்கும் போது கிடைக்காத வெற்றி மீள எத்தனை தடவை கிடைத்தாலும் தோல்விதான்.

வெற்றி அடைவது எப்படி என யோசிப்பதை விட, தோல்வி அடைந்தது எப்படி என யோசி, நீ கண்டிப்பாக வெற்றி அடைவாய்!

நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டுமென ஆசைகொள்ளாதே!

தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.

உனது எதிரியை நீ விரும்பும் போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்துகொள்கிறாய்.

ஒரு மனிதன் அவனதுதாய் மரணிக்கும்வரை குழந்தையாகவே இருக்கிறான்.

பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துகொள்: நீ முன்னால் இருக்கிறாய்என்று.

எவராலும் வெற்றியைத் தாங்கிகொள்ள முடியும். ஆனால் வலிமைமிக்கவரால் மட்டுமே தோல்வியையும் தாங்கமுடியும்.


அந்நியநாட்டிலே ஓர் அரசனாக இருப்பதை காட்டிலும், தனதுதாய்நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாக கொள்ளவேண்டும்.

எனது சொத்துக்கள் அனைத்தும் எனக்குபின் என்கட்சிக்கு சேரவேண்டும். கட்சி அழிந்துவிட்டால் என்நாட்டுக்கு சேரவேண்டும்.

எல்லாவற்றையும் வெல்லும் வலிமையை நீங்கள்அடைய விரும்புகிறீர்கள் என்றால்நீங்கள் எந்தக் காரியத்தையும் தன்னம்பிக்கையுடன் தன்னந்தனியாக செய்து முடிப்பதற்கு தேவையான சக்தி உள்ளவராக உயரவேண்டும்.

பொய்யை பெரிதாக்கு, இலகுவாக்கு, சொல்லிகொண்டே இரு! கடைசியில் மக்கள் அதைநம்புவார்கள்.

கல்விமுறை சரியாக இல்லா தேசத்திலே பயின்றவர்கள், பொறுப்பை ஏற்றுக்கொள்ள அஞ்சுவார்கள் முக்கியமான பிரச்சினைகளில் ஈடுபட அவர்களால் முடியாது.

எல்லோரும் நிலவை போன்றவர்கள். அதற்கு இருளான பக்கமொன்றும் உள்ளது.

வெற்றி பெற்றால் அதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் தோல்வியடைந்தால் உங்கள் தோல்விற்கான காரணங்களை பற்றி விளக்க நீங்கள் அங்கே இருக்கக் கூடாது.

வாழ்க்கையில் முக்கியமானது எதுவும், மனிதனை வலியவந்து அடைவதில்லை. ஒவ்வொன்றுக்கும் போராடியே தீரவேண்டும். அதிர்ஷ்டவசத்தினாலோ, அல்லது 'எல்லாம் தலைவிதிப்படி ஆகிறது' என்று சொல்லி கொண்டிருப்பதனாலோ ஒருதேசம் முன்னேற்றம் அடைவதில்லை. முயற்சியினாலேயே அடைய முடியும்.

இந்த போருக்கு நான்தான் மூலகாரணம் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் போர்வெறி கூடாது, ஆயுதக்குறைப்பு செய்ய வேண்டும் என்று நானே வலியுறுத்தி இருக்கிறேன்.


ஹிட்லரின் பொன்மொழிகள்!

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.